காவல் கண்காணிப்பு அறை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Update: 2023-07-02 12:37 GMT

காவல் கண்காணிப்பு அறை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க காவல் கண்காணிப்பு அறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. போலீசார் நடவடிக்கை எடுத்து காவல் கண்காணிப்பு அறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பஸ் நிலையத்தில் குற்றச்சம்பவங்கள் குறையும், போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?.

ராஜ், பல்லடம்.

மேலும் செய்திகள்