இரவு நேர பஸ் சேவை தேவை

Update: 2023-09-20 18:05 GMT

திருத்தணியில் இருந்து அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர் ஆகிய ஊர்களுக்கு தடம் எண்.83 என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திருத்தணியில் இருந்து குண்ணத்தூருக்கு இரவு 9.30 மணி பஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இதை நம்பி உள்ள அப்பகுதி சிரமப்படுகின்றனர். இரவில் இயக்கப்படாத பஸ்சால் மக்கள் வீடு திரும்ப முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பஸ்சை மீண்டும் இரவு நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கநாதன். குருவராஜபேட்டை.

மேலும் செய்திகள்