பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு வரும் சரக்கு வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கடைவீதியில் வாகனங்களை முறையாக நிறுத்தவும், சரக்கு வாகனங்கள் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சரக்குகளை கொண்டு வரவும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், பல்லடம்.