நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட லத்துவாடியில் என்.புதுப்பட்டியில் இருந்து வரும் சாலையில் பெயர் பலகை உள்ளது. அந்த பெயர் பலகையில் நீண்ட நாட்களாக லத்துவாடி என்ற எழுத்தில் ‘லத்து’ மட்டும் உள்ளது. ‘வாடி’ அழிந்து போய் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவே பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-ராமசாமி, லத்துவாடி.