சேலம் மாநகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்களில் சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் அதிக சத்தம் எழுப்பியபடியே செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி போக்குவரத்து போலீசார் இரவில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இனியவன், சேலம்.