திருப்பத்தூருக்கு இரவில் பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள் பயணிகளை பஸ் நிலையத்துக்கு வெளியே திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் ஏற்றி, இறக்கி செல்கின்றன. பஸ் நிலையத்துக்கு வெளியே பயணிகளை இரவில் ஏற்றி, இறக்குவதால் திருட்டு சம்பவம் நடக்கும் அபாயம் உள்ளது. இரவில் வரும் பஸ்கள் பஸ் நிலையத்தின் உள்ளே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ச்சுனன், திருப்பத்தூர்.