கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வருகிறார்கள். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் பஸ்களில் வரும்போது கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்படவில்லை. சாதாரண கட்டணத்தில் இயங்க கூடிய பஸ்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் இருந்து நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், ஓசூர்.