சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-06-29 16:04 GMT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. அதேபோல அரசு அலுவலக வளாகத்திலும் அதிக அளவில் மாடுகள் இருப்பதால் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்