வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி நரிகள் கரடு பகுதியில் இருந்து செம்மாண்டப்பட்டி வரை தார்சாலை செல்கிறது. இந்த சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு சாலையின் இரு புறங்களில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செந்தில், செம்மாண்டப்பட்டி.