பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-06-15 17:02 GMT

கிருஷ்ணகிரி நகரில் இருந்து வார விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெங்களூரு, ஓசூரில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி விடுவதால் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடம் கிடைப்பதில்லை.அதேபோல ஞாயிற்றுக்கிழமையும், தொடர் விடுமுறை நாட்கள் நிறைவடையும் போதும் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கு பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. ஆகவே கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்கள் இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சஞ்சய், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்