பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2025-06-08 17:12 GMT

கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்பட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு பஸ்களில வரும்போது அவர்களை சுங்கச்சாவடி அருகிலோ அல்லது உயர்மட்ட மேம்பாலம் முடியும் இடத்திலோ இறக்கி விட்டு செல்கிறார்கள். இதனால் கலெக்டர் அலுவலகம் செல்லும் மக்கள் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே மேம்பாலத்தின் கீழ் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், குருபரப்பள்ளி.

மேலும் செய்திகள்