போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-06-01 10:47 GMT

கோவை சீரநாயக்கன்பாளையம் டேங்பெட் லைன் வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலையோரத்தில் சுமார் 4 அடிக்கு குழி ேதாண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணியை முடித்து குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து குழியை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்