போலீசார் வாகன சோதனை

Update: 2025-05-04 17:15 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் பலரும் செல்கிறார்கள். இந்த சாலையில் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் ரேஸ் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் ஓட்டப்படுகின்றன. அதிக ஒலி எழுப்ப கூடிய வாகனங்களை வடிவமைத்து பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த வாகன ஓட்டிகள் செல்கிறார்கள். குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பலரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலும், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலும் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு அதிவேகமாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே வார விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடி உள்பட முக்கிய இடங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்