உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருமூர்த்திமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவை அமணலிங்கேசுவரர் கோவில் பகுதியில் நிற்காமல் அணைக்கு அருகே உள்ள படகு இல்லத்தில் நிறுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில பஸ்கள் திருமூர்த்திமலை கோவில் வரையிலும் இயங்குவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அரசு பஸ்கள் திருமூர்த்திமலை கோவில் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?