கால்நடைகளால் தொந்தரவு

Update: 2026-03-01 13:38 GMT

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தை சுற்றி வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் என ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த இடத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றுகின்றன. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் மாடுகள் இருப்பதால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். எனவே அரசு அலுவலகத்தை சுற்றிலும் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி