கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து அரிக்காரன்வலசு, வேளாம்பூண்டி, ஒத்தமாந்துறை வழியாக சின்னதாராபுரம் வரை காலை, மாலை என இரு மார்கங்களிலும் நகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கோரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட இந்த சேவை காலை ஒரு மார்கமாகவும், மாலையில் இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி காலையிலும் இருமார்க்கத்தில் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.