மதுரை வார்டு எண் 47 தெற்கு வாசல் சின்ன கடை வீதி, தெற்கு மார்ட் வீதி சந்திப்பில் சாலையோரத்தில் ஆங்காங்கே மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் இவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் அதிகாரிகள் முன்வருவார்களா?