சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிந்தும் பேரிகார்டு சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பேரிகார்டை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.