அந்தியூரில் இருந்து அம்மாபேட்டைக்கு இயக்கப்பட்டு வந்த ஏ4 என்ற அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்துவந்த பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து புறநகர் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் அவலநிலை ஏற்படுகிறது. இவர்களின் நலன் கருதி மீண்டும் ஏ4 டவுன் பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?