நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் இரவு வரை வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மார்க்கமாக சென்னை வரையிலும், பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூரு வரையிலும் தினமும் ஏராளமான பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சென்று வருகின்றனர். இவர்களின் சிரமத்தைப் போக்க நாட்டறம்பள்ளியில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், நாட்டறம்பள்ளி.