போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-09 14:04 GMT

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதியாகும். குறிப்பாக விடுமுறை நாட்கள், காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்களும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே ராயக்கோட்டை மேம்பாலத்திற்கு அடியில் உள்ளது போல அங்கும் சிக்னல் அமைத்து சீராக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி