லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-09-15 17:41 GMT

கிருஷ்ணகிரி நகருக்கு அருகாமையில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான லாரிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன. அதேபோல் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான லாரிகள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த நிலையில் சுங்கச்சாவடி அருகில் ஏராளமான லாரிகள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்