பஸ்கள் இயக்கலாமே!

Update: 2024-09-01 17:28 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, மேலுமலை, சாமல்பள்ளம், ஒட்டையனூர், சூளகிரி, காமன் தொட்டி, கோபசந்திரம் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி , ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக வந்து செல்கிறார்கள். பகலில் அவர்களுக்கு போதிய பஸ் வசதி இருந்தபோதிலும் இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் புறப்படும் பஸ்கள் ஓசூர் பயணிகளை மட்டுமே ஏற்றுகிறார்கள். அதேபோல் ஓசூரில் இருந்து புறப்படும் பஸ்களிலும் கிருஷ்ணகிரி பயணிகளை மட்டுமே ஏற்றுகிறார்கள். இடைப்பட்ட கிராமத்தில் உள்ள மக்களை ஏற்றுவதில்லை. இதனால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அனைத்து கிராமங்களிலும் நின்று செல்லும் வகையில் பஸ்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாக இயக்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.

-சதீஷ், காமன்தொட்டி.

மேலும் செய்திகள்