வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2024-07-21 16:24 GMT

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

திருப்பூர் மாநகர பகுதியான பி.என்.சாலையில் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இதன் அருகே வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால் அதில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணாக வேகத்தடை இருப்பதை தெரியாதவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் புதிதாக வருபவர்கள் வேகத்தடை அருகே வந்ததும் திடீர் பிரேக் பிடிப்பதால் பின்னால் வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் உடனடியாக அந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-குணசேகர், திருப்பூர்.

மேலும் செய்திகள்