போக்குவரத்து இடையூறு

Update: 2024-07-14 12:39 GMT

கவுண்டம்பாளையம் தடாகம் சாலையோரத்தில் டி.வி.எஸ். நகரில் பஸ் நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறை பணிக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு கற்கள் மொத்தமாக வைக்கப்பட்டு உள்ளன. இவை வைக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் அந்த கற்கள் வீணாகும் நிலை உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த கற்களை பயன்படுத்தவோ அல்லது அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்