கிராமங்களுக்கு பாலம் அமைக்கலாமே!

Update: 2024-06-16 17:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஜெகதேவி ஊராட்சி ஜிடடோபனப்பள்ளி ஜூஜி வகுத்தன் கொட்டாய், தண்ணீர் பள்ளம் வேடர்கொட்டாய் கிராமங்கள் காலனூர் ஆற்றின் எதிர்புறமும் அமைந்துள்ளது. இந்த வெவ்வேறு கிராமங்களிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த 2 பகுதிகளையும் தனித்தனியே காலனூர் ஆறு பிரிக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றை கடக்க மிகவும் சிரமமடைகின்றனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், பர்கூர்.

மேலும் செய்திகள்