சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-06-02 17:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் உழவர் சந்தை அருகே, பாகலூர் ரோடு ரவுண்டானா, பழைய பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்கள் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சாலைகளின் நடுவே கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், ஓசூர்.

மேலும் செய்திகள்