திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய நகரியத்தில் இருந்து, பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்ல நேரடியாக பஸ்கள் இல்லை. இதனால் பயணிகள் அம்பத்தூர் சென்று செல்லவேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் சரியான நேரத்திற்கு பயணிகளால் செல்லமுடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.