நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-02 15:31 GMT

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

திருப்பூர்-தாராபுரம் மெயின் ேராட்டில் கோவில்வழி பகுதியில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். தாராபுரம் ரோட்டில் பழவஞ்சிப்பாளையம் பிரிவு அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் மேற்கூரை தகரம் துருபிடித்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து பஸ், ஷேர் ஆட்டோக்களில் செல்ல காத்்திருக்கும் பொதுமக்கள் சாலையில் நிற்கும் அவலநிலை உள்ளது. தற்போது பகலில் வெயில் அதிகரித்தும், மாலையில் சில நேரம் மழையும் பெய்து வருகிறது. இதனால் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நிழற்குைடயை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

-கணேசன், திருப்பூர்.

மேலும் செய்திகள்