பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடும் பஸ் டிரைவர்கள்

Update: 2024-06-02 15:24 GMT

பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடும் பஸ் டிரைவர்கள்

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல்லடம் பஸ் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இதனால் பயணிகள் சாலையை கடப்பதற்கு அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ், பல்லடம்.

மேலும் செய்திகள்