ரேசிங் தடுக்கப்படுமா?

Update: 2024-03-03 17:21 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஒட்டிகள் ரேசிங் செல்கிறார்கள். இந்த இருசக்கர வாகன ஓட்டிகளால் பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாகவும், ஆபத்தாகவும் உள்ளது. ஆகவே தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அதிவேகமாக செல்ல கூடிய இது போன்றவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், சூளகிரி.

மேலும் செய்திகள்