கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2024-03-03 17:07 GMT

தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இரவு ஷிப்ட் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கோவில்வழியில் இருந்து மதுரை சென்று அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் குடும்பத்துடன் செல்பவர்கள் சிரமம் அடைகிறார்கள். எனவே திருப்பூர் கோவில்வழியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இரவு 12 மணிக்கு மேல் பஸ் இயக்க வேண்டும்.


மேலும் செய்திகள்