மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

Update: 2023-12-03 17:10 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து மேட்டூர் வரை இரு வழி தடங்களிலும் டவுன் பஸ் இயங்கி வந்தது. கொேரானாவுக்கு பின் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த வழிதடத்தில் உள்ள காளிப்பட்டி, பொட்டனேரி, நால்ரோடு, குஞ்சாண்டியூர், ராமநகர், 16 கண் பாலம், தெர்மல் ஆகிய ஊர்களில் இருந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழியாக மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-துரை, சேலம்.

மேலும் செய்திகள்