எச்சரிக்கை பலகை

Update: 2023-11-26 17:14 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள் மற்றும் ஒரு சில வாகனங்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு, எச்சரிக்கை சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், பாலக்கோடு.

மேலும் செய்திகள்