போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-04 17:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஒசூர் மற்றும் தர்மபுரி மெயின்ரோட்டின் இருபுறமும் பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையின் முன்பு இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புருசப்பன், ராயக்கோட்டை.

மேலும் செய்திகள்