புதர் சூழ்ந்திருக்கும் ஊர் பெயர் பதாகை

Update: 2023-07-02 12:39 GMT

புதர் சூழ்ந்திருக்கும் ஊர் பெயர் பதாகை

காங்கயம், கோவை சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலை வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சிவன்மலை செல்லும் வழி என்று அம்புக்குறி காட்டப்பட்ட திசைகாட்டும் பெயர் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அது செடி கொடிகள் சூழ்ந்து வெளியே தெரியாத அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனடியாக செடி கொடிகளை அப்புறப்படுத்தி பதாகை சரிவர தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமார், காங்கயம்.

மேலும் செய்திகள்