அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2024-02-11 16:42 GMT

ஆரணி பணிமனையை சேர்ந்த தடம் எண்: 202 என்ற அரசு பஸ் 12.புத்தூர் கிராமத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், சேவூர் வழியாக சென்னைக்கு கடந்த 5 வருடங்களாக பஸ் இயங்கி கொண்டு இருந்தது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வெட்டியாந்தொழுவம் ஏரிக்கரை சாலை சீரமைப்புப்பணியால் அந்தப் பஸ் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், அதிகாலை நேரத்தில் சென்னைைய நோக்கி பயணம் செய்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தடம் எண்: 202 பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாஸ்கர், ஆரணி. 

மேலும் செய்திகள்