சாலைகளில் நாய்கள் தொல்லை..?

Update: 2023-08-13 17:24 GMT

சாலைகளில் நாய்கள் தொல்லை..?

அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நாய்கள் அதிகளவில் சாலைகளில் குறுக்கும்நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் திக்குமுக்காட வேண்டிய நிலை உள்ளது. நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் பலர் பயந்து ஓட்டம் பிடிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தெரு நாய்களை பிடிக்க சம்மந்தப்பட்ட துறை நடவடிக்கை மேற்கொண்டு அனுப்பாளையம் பகுதி மட்டுமின்றி பல்வேறு வீதிகளிலும் இதுபோன்ற தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது வருகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

- ந. தெய்வராஜ், அனுப்பர்பாளையம்.

மேலும் செய்திகள்