வாகனங்களால் ேபாக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-08-27 12:03 GMT

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையின் முன்பு உள்ள காந்தி சிலை அருகே இருபுறமும் சாலையோரம் பலர் கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கோட்டையைச் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அங்கு வாகனங்கள் நிறுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமோதரன், வேலூர்.

மேலும் செய்திகள்