ஆற்காடு பஸ் நிலையம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளன. இந்தக் கடைகள் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து, பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், சமூக ஆர்வலர், ஆற்காடு.