பஸ்சில் ஆபத்தான பயணம்

Update: 2022-11-13 11:00 GMT

கண்ணமங்கலம் புதிய சாலை வழியாக வேலூர்-திருவண்ணாமலைக்கு பஸ்கள் அடிக்கடி சென்று வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்போது பஸ்களில் இடமில்லாமல் பயணிகள் பயணம் செய்ய அவதிப்படுகின்றனர். இதனால் வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் பஸ்சின் பின் பக்கமுள்ள ஏணியில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். மேலும் பலர் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். இதை, பஸ்சின் டிரைவர், கண்டக்டர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காமராஜ், கண்ணமங்கலம்.  

மேலும் செய்திகள்