நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்கள்

Update: 2022-09-09 11:05 GMT

கண்ணமங்கலம் வழியாக வேலூரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பஸ்கள் அந்தந்த நிறுத்தத்தில் நிற்பதில்லை. நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி நிறுத்துகிறார்கள். இதனால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். டவுன் பஸ்கள் அந்தந்த நிறுத்தத்திலேயே நிறுத்தி பயணிகள் ஏற்றி இயக்க வேண்டும். மக்கள் கூட்டத்தை பார்த்து சற்று தூரத்தில் நிற்பது, நிறுத்தாமலேயே வேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நெப்போலியன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்