பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-11-05 17:37 GMT

வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையின் முன் அந்த வழியாக செல்லும் எந்த ஒரு பஸ்சும் நின்று செல்வதில்லை. காஞ்சீபுரம், திருத்தணி, சென்னை, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர். வாலாஜா அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.சுந்தரமூர்த்தி, வாலாஜா. 

மேலும் செய்திகள்