பஸ் நிலையத்தில் சுகாதாரசீர்கேடு

Update: 2023-09-03 19:02 GMT

பஸ் நிலையத்தில் சுகாதாரசீர்கேடு

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, கோவை, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கும் டவுன்பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் அதிகம் வந்து செல்கிறார்கள். ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள ஆண்கள் இலவச சிறுநீர் கழிப்பிடம் சரியாக தூய்மை செய்யப்படாமலும், இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாமல் இருள்சூழ்ந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சிலர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

-முத்துராஜ், உடுமலை.

மேலும் செய்திகள்