ஓய்வறையாக மாறிய பஸ்நிலையம்

Update: 2023-06-07 17:13 GMT

ஓய்வறையாக மாறிய பஸ்நிலையம்

திருப்பூர் மத்திய பஸ்நிலையம் சமீபத்தில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பயணிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பஸ் நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வந்துசெல்கிறார்கள். ஆனால் சாலையில் சுற்றித்திரியும் சிலர் பஸ்நிலைய வளாகத்திற்குள் ஆங்காங்கே தங்கியும், படுத்தும் பொழுதை கழித்து வருகிறார்கள். சிலநேரங்களில் உணவு சாப்பிடுவதும், மீதம் சாப்பாட்டை அங்கேயே போடுவதும் என உள்ளதால் பயணிகள் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. இத்தகைய செயலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

சுந்தரம், திருப்பூர்/

மேலும் செய்திகள்

பஸ் வசதி