பழுதடைந்த இருக்கைகள்

Update: 2023-06-07 16:57 GMT

பழுதடைந்த இருக்கைகள்

பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் இருக்கைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதில் சில நாற்காலிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முருகன், திருப்பூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி