பஸ் வசதி வழங்க கோரிக்கை

Update: 2022-09-24 16:28 GMT

பஸ் வசதி வழங்க கோரிக்கை

பல்லடம் ஒன்றிய பகுதியில் புளியம்பட்டி, மாணிக்காபுரம், வலையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி நேரங்களில் சென்று வர முறையான பஸ்வசதி கிடையாது. இதனால் அவர்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே இந்த வழித்தடங்களில் இயக்கிக் கொண்டிருக்கிற பஸ்களை முறையாக பள்ளி நேரங்களில் இயக்க வேண்டும். மேலும் கொரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வழித்தட பஸ்களையும் உடனே இயக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.

அர்ஜூனன், பல்லடம் 99420 51200

மேலும் செய்திகள்

பஸ் வசதி