ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-08-28 12:30 GMT

வேலூர் ஆற்காடு சாலையில் அதிகமான வாகனங்கள் செல்கிறது. தனியார் மருத்துவமனை அருகே சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். அதனால் அங்கு திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தகுமார், வேலூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி