அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-08-13 17:46 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் காக்கங்கரை ஊராட்சி உள்ளது. காக்கங்கரை ஊராட்சி வழியாக திருப்பத்தூர்- தர்மபுரி சாலை உள்ளது. இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களில் ஒரு சில பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காக்கங்கரை ஊராட்சியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

வெண்பிரணவ், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்