குளிர்சாதன பஸ் திடீர் நிறுத்தம்

Update: 2024-03-17 16:30 GMT

ஆரணியில் இருந்து தினமும் 202 என்ற தடம் எண் கொண்ட அரசு குளிர்சாதன பஸ் சென்னைக்கு அதிகாலை 5.45 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் இயக்கப்பட்டது. அதேபோல்சென்னையில் இருந்து ஆரணிக்கு 2 முறை இயக்கப்பட்டது. அந்தப் பஸ் கடந்த 5 நாட்களாக திடீரென இயக்கப்படவில்லை. வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் குளிர்சாதன பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட குளிர்சாதன பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

-தங்கசாமி, ஆரணி. 

மேலும் செய்திகள்